நஜீப்பிற்குச் சிறை! இந்த ஆண்டின் சிறந்த மகிழ்ச்சி! – டி.ஏ.பி
- Thinagaren Sanggaren
- 22 Dec, 2025
டிசம்பர் 22,
முன்னாள் பிரதமர் Datuk Seri Najib Razak தொடர்புடைய ஊழல் வழக்கில் அவரின் பொது மன்னிப்பை ரத்து செய்த நீதிமன்றத்தின் முடிவு வரவேற்கத்தக்கது என்றும் இந்த ஆண்டின் மிக சிறந்த மகிழ்ச்சியான ஒரு தருணமாகத் தாம் கருதுவதாக டி.ஏ.பியின் தேசிய விளம்பரச் செயலாளரும் பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினருமான Yeo Bee Yin கருத்து தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் நஜீப்பிற்கு எதிரான நீதிமன்ற வழக்குகளைக் கடந்த 2018 முதல் டி.ஏ.பி கட்சியின் முக்கிய தலைவர்களின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
மாமன்னர் நஜீப்பிற்கு வழங்கிய தண்டனை குறைப்பிற்கானப் பொதுமன்னிப்பை இன்று
நீதிமன்றம் ஏற்றுக்கொண்டாலும் நஜீப்பிற்கான வீட்டுக்காவல் முன்மொழிவை மறுத்தது. இதனால்
மாமன்னர் வழங்கிய தண்டனை குறைப்பு மட்டுமே நடைமுறைப்படுத்தப்படும் நிலையில் நஜீப்பின்
வீட்டுக்காவலுக்கான மேல்முறையீட்டை நிதிமன்றம் ரத்து செய்துள்ளதை அடுத்து டி.ஏ.பியின்
பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினரான Yeo Bee Yin இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



