நஜீப் ரசாக் வீட்டு காவல் கோரிக்கை மேல்முறையீட்டை வாபஸ் பெற்றார்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப். 27-

முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக், தன்னுடைய சிறை தண்டனையின் மீதியை வீட்டு காவலில் அனுபவிக்க அனுமதி கோரி தாக்கல் செய்த நீதிமன்ற மறுஆய்வு மனுவில் உயர்நீதிமன்றம் எடுத்த தீர்ப்புக்கு எதிராக செய்த மேல்முறையீட்டை வாபஸ் பெற்றுள்ளார்.

முன்னாள் பெக்கான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான நஜீப், தற்போது SRC International Sdn Bhd நிறுவனத்துக்குச் சொந்தமான 42 மில்லியன் நிதி மோசடி குற்றச்சாட்டில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டு காஜாங் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

ஏப்ரல் 2ஆம் தேதி தேதியிட்ட Tetuan Shafee & Co வழக்கறிஞர் நிறுவனத்தின் அறிவிப்பின் மூலம், மேல்முறையீட்டாளர் எனும் நிலைமையில் உள்ள நஜீப், தனது மேல்முறையீட்டை எந்தவித மீண்டும் தாக்கல் செய்யும் உரிமையும் இன்றி, மேலும் செலவுகள் தொடர்பாக எந்த உத்தரவுமின்றி வாபஸ் பெற விரும்புவதாக நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கைக்கு பின்னால் உள்ள காரணங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதையடுத்து, ஏப்ரல் 14ஆம் தேதி மேல்முறையீட்டு நீதிமன்ற துணைப் பதிவாளர், தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு வாபஸ் அறிவிப்பு சரியானதாக இருப்பதாக பதிவு செய்து, நஜீப்பின் மேல்முறையீட்டு அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக ரத்து செய்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *