சக்கர நாற்காலியில் NAJIB! – கலங்கிய ஆதரவாளர்கள்

top-news
FREE WEBSITE AD

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் கடந்த வாரம் கடுமையான முழங்கால் பிறழ்ற்சியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று 1MDBயின் 620 மில்லியன் டாலர் மோசடி வழக்கின் விசாரணையில் தனது தரப்பின் ஆதாரங்களை வழங்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் இன்று சக்கர நாற்காலியில் நீதிமன்றத்திற்கு வந்தார். முழங்கால் வீக்கத்தால் தற்போது வரையும் கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நஜீப் விசாரணைக்குப் பின் மீண்டும் சிகிச்சைக்காகக் கோலாலம்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நீதிமன்ற விசாரணையில் நஜீப் பங்கேற்கவிருப்பதால் இதுவரையில் அவருக்கு மயக்கத்தை ஏற்படுத்து வலி நிவாரணி மருந்தான opioids கொடுக்காமல் அவர் வலியை அனுபவித்து வந்த நிலையில் இனி விசாரணை இல்லாததால் அவருக்கு opioids கொடுக்கலாம் என நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. 

இத்துடன் அவரிடம் பணமோசடி வழக்குகளுக்கான விசாரணைகள் முடிவடையவில்லை என்றும், மொத்தம் 21 பணமோசடி வழக்குகளுக்கான விசாரணைகள் நிலுவையில் இருப்பதால் மருத்துவச் சிகிச்சைகளைக் கவனத்துடன் மேற்கொள்ளும்படி கோலாலம்பூர் மருத்துவமனைக்கு நீதிமன்றம் வலியுறுத்தியது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *