லாபுவான் சர்வதேச படகு முனையத்திற்கு வருகை தரும் பயணிகள் எண்ணிக்கை உயர்வு!
- Muthu Kumar
- 18 Oct, 2025
லாபுவான், அக் 18:
தீபாவளி மற்றும் கூடுதல் பள்ளி விடுமுறை நாட்களுடன் இணைந்து நீண்ட வார இறுதி விடுமுறைக்காக சபா மற்றும் சரவாக் பகுதிக்கு ஆயிரக்கணக்கான பயணிகள் லாபுவான் ரோ-ரோ படகு முனையம் மற்றும் லாபுவான் சர்வதேச படகு முனையத்திற்கு வருகை தருகின்றனர்.
டிக்கெட் மேலாண்மை நிறுவனமான லாபுவான் பாயிண்ட் எண்டர்பிரைஸின் கூற்றுப்படி, புதன்கிழமை முதல் படகு பயணிகள் போக்குவரத்து கணிசமாக அதிகரித்துள்ளது, மெனோம்போக்கிற்கான பெரும்பாலான டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்றுத் தீர்ந்துவிட்டன.
அக்டோபர் 16 முதல் 22 வரை லாபுவானுக்கும் மெனோம்போக்கிற்கும் இடையே தினமும் ஏழு சுற்றுப் பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.
லாபுவானிலிருந்து மெனும்போக்கிற்கான டிக்கெட்டுகள் முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளன, மேலும் அடுத்த இருக்கைகள் அக்டோபர் 23 அன்று மட்டுமே கிடைக்கும்” என்று அதன் மேலாளர் ராபர்ட் லிங் சாங் ஷியெங் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



