திவால் ஆனவர்களின் எண்ணிக்கையில் அதிகரிக்கும் அரசு ஊழியர்கள்!

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, செப். 9- கடந்த 2021 முதல் இவ்வாண்டு வரை புதிதாக பதிவு செய்யப்பட்ட திவால் ஆனவர்களின் எண்ணிக்கையில்,  10 முதல் 13 விழுக்காடு அரசு ஊழியர்களை உள்ளடக்கியிருப்பதாக  மலேசிய திவால் இலாகாவின் தலைமை இயக்குநர் டத்தோ எம். பக்ரி அப்துல் மஜிட் தெரிவித்துள்ளார்.
தேசிய அளவில் திவால் நிலை குறைந்து வருவதை தரவுகள் காட்டினாலும் அரசு ஊழியர்கள் மத்தியில் இந்த எண்ணிக்கை உயர்ந்து வருவது கவலை அளிக்கும் விதமாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசு அதிகாரிகள் மத்தியில் நிதியை நிர்வகிப்பதில் காணப்படும் பலவீனம் சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு மட்டுமின்றி பொதுச்  சேவைத் துறையின் சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அவர் கூறினார்.
அரசு ஊழியர்கள் திவாலாகும் பட்சத்தில், கடுமையான கடன் பிரச்சனை மற்றும் பொதுச் சேவைத் துறையின் தோற்றத்திற்கு களங்கும் ஏற்படுத்தியது ஆகிய காரணங்களுக்காக அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் படலாம்என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *