கண்குறைபாடு குழந்தைகள் அதிகரிப்பு! - அமைச்சர் கவலை

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா:  கூட்டரசுப் பிரதேசத்தில்  கண் சுகாதார திட்டத்தின் கீழ  சோதனையிடப்பட்ட  மாணவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு மங்கலான பார்வை இருப்பது கண்டறியப்பட்டதாக கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டாக்டர் ஜலிஹா முஸ்தபா தெரிவித்துள்ளார்.

'Mata Hati Wilayah' ஸ்கிரீனிங் திட்டத்தின்கீழ் நடைபெற்ற இந்தச் சோதனையில்,  மாணவர்கள் மத்தியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த கண் பார்வை குறைபாடு,  கவலையளிக்கும் போக்கை வெளிப்படுத்தியதாக அவர்  கூறினார்.

கடந்த ஜூன் மாதம் திட்டம் தொடங்கியதில் இருந்து 2,077 ஆரம்பப் பள்ளி மாணவர்களில் 58.2 விழுக்காட்டினருக்கு பார்வை மங்கலானது கண்டறியப்பட்டது என்று சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சருமான அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *