பாரீஸ் பாராலிம்பிக்ஸ் போட்டியில் கலக்கும் இந்திய வீரர்கள்!

top-news
FREE WEBSITE AD

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டி கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. வரும் செப்டம்பர் 8-ம் தேதி வரை நடைபெறும் இந்த விளையாட்டு தொடரில் இந்தியா சார்பில் 84 பேர் பங்கேற்றுள்ளனர்.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவரான துளசிமதி பாரா ஒலிம்பிக் பேட்மிண்டனில் கலக்கி வரும் இவர் இன்று தங்க பதக்கத்திற்கான போட்டி நடைபெற உள்ள நிலையில் ஒருவேளை தங்கம் வெல்லும் பட்சத்தில் பாரா ஒலிம்பிக் பேட்மிண்டனில் தங்கம் வெல்லும் முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை துளசிமதி படைப்பார்.

மேலும் மற்றொரு தமிழக வீரரான காரைக்குடியைச் சார்ந்த சோலைமலையும் தன் பங்கிற்கு பேட்மிண்டனில் கலக்கி வருகிறார்..இவர் பறந்து பறந்து விளையாடும் வேகத்தை பார்த்து கண்டிப்பாக ஒரு பதக்கம் வென்று தருவார் என இந்திய மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதுவரை பாரிஸ் பாராலிம்பிக் தொடரில் இந்தியா 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்கள் வென்று பதக்கப் பட்டியலில் 27 வது இடத்தில் உள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *