இந்தியாவின் ஜனநாயகம் ஓர் அற்புதம்! மோடிக்கு அன்வார் வாழ்த்து!

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, ஜூன் 5: இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி பெற்றதற்காக நான் வாழ்த்துகிறேன். இந்தியாவில் ஜனநாயகம் நடைமுறைப்படுத்தப்படுவது உண்மையிலேயே ஓர் அற்புதம்" என்று அன்வார் தமது வாழ்த்துச் செய்தியில் பதிவிட்டுள்ளார்.

இந்திய பிரதமர் மோடி இந்தியப் பொருளாதாரத்தின் வரலாற்று மறுசீரமைப்பைக் கண்காணித்துள்ளார். இது இந்தியாவின் குடிமக்களுக்கும், பிராந்தியத்திற்கும் சிறந்த வாழ்க்கைக்கு உறுதியளிக்கிறது. மலேசியாவிற்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளின் புதிய சகாப்தத்தை உருவாக்க அவருடன் நெருக்கமாகப் பணியாற்ற தாம் விரும்புவதாக அன்வார் குறிப்பிட்டுள்ளார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *