மதுபான நிறுவன நன்கொடை சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்! - அந்தோணி லோக்

top-news
FREE WEBSITE AD

கிள்ளான், ஜூலை 29: பள்ளி நன்கொடைகளை ஆதரிப்பதற்காக ஒரு மதுபான  நிறுவனம் ஏற்பாடு செய்த நிதி திரட்டும் நிகழ்ச்சி தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் இன்று வேண்டுகோள் விடுத்தார்.

அனைத்து பள்ளி நன்கொடைகளும் கல்வி அமைச்சு நிர்ணயித்த வழிகாட்டுதல்களுக்கு இணங்க  இருக்க வேண்டும் என்று அவர் கூறினார். இந்த நடைமுறைகள் தற்போதுள்ள கொள்கைகளுடன் ஒத்துப்போவதாகவும் அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இந்த நிதி திரட்டும் நிகழ்ச்சிகள் தாய்மொழிப் மொழிப் பள்ளிகளுக்கு வருடக்கணக்காக எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நடத்தப்பட்டு வருகிறது. காலங்காலமாக எந்தப் பிரச்னையும் இல்லாமல் நடைமுறையில் இருக்கும் இந்த விஷயத்தில் சர்ச்சையை உருவாக்கத் தேவையில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

துரதிர்ஷ்டவசமாக, சில கட்சிகள் இதை அரசியலாக்க முயற்சிக்கின்றன, இதை ஒரு பிரச்சினையாக மாற்ற முயற்சிக்கின்றன என்று அவர் இன்று பசார் ஜாவா நிலையத்தில் எல்ஆர்டி 3 மேம்பாட்டின் நிலையை சரிபார்த்த பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *