லாரி ஓட்டுநர்களில் 13 பேருக்கு ஒருவர் போதைப்பொருளுக்கு அடிமை! - அந்தோணி லோக்

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 7: ஏராளமான சுற்றுலாப் பேருந்துகள், விரைவுப் பேருந்துகள் மற்றும் வணிக வாகன ஓட்டுநர்கள் பணியில் இருந்தபோது போதைப்பொருள் உட்கொண்டது சோதனையில் கண்டறியப்பட்டதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.
ஜூலை 2 முதல் 31 வரை நடத்தப்பட்ட சுற்றுலா மற்றும் பொதுச் சேவை வாகனங்களை உள்ளடக்கிய சிறப்பு நடவடிக்கையின் போது 26 சுற்றுலா பேருந்து மற்றும் விரைவு பேருந்து ஓட்டுநர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தது கண்டறியப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
ஆகஸ்ட் 1 முதல் 5 வரை நடத்தப்பட்ட வணிக வாகன சிறப்பு நடவடிக்கையில் 276 வணிக வாகன ஓட்டுநர்கள் சிறுநீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.  இதன் விளைவாக 21 லாரி ஓட்டுநர்கள் சாலைப் போக்குவரத்துத் துறை (ஜேபிஜே) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
அதாவது, ஒவ்வொரு 13 ஓட்டுனருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் சாலையில் வாகனம் ஓட்டும் போது போதைக்கு அடிமையாகிறார்கள் என்று அவர் விளக்கினார். ‘இது மிகவும் கவலைக்கிடமான சூழ்நிலை என்று லோக் செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *