இடைத்தேர்தல் தோல்விக்குத் தனிநபர் பொறுப்பல்ல! - முகைதீன்

top-news
FREE WEBSITE AD

Nenggiri இடைத்தேர்தலில் பெரிக்காத்தான் தோல்வி அடைந்தாலும் கட்சியினர் சோர்வடைய வேண்டாம் என  பெரிக்காத்தான் தலைவர் Muhyiddin Yassin கட்சி உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார். 

தேர்தலில் வெற்றியைத் தக்க வைக்க தவறினாலும் பெரிக்காத்தானுக்கு மக்கள் ஆதரவு உண்டு, அந்த ஆதரவைத் தொடர்ந்து தக்க வைக்க பெரிக்காத்தான் தொடர்ந்து செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். 

தோல்விக்குத் தனிப்பட்ட முறையில் யாரும் பொறுப்பேற்க வேண்டாம் என்றும் அவ்வாறானச் செயல் கட்சிப் பின்னடைவுக்கு இட்டுச் செல்லும் என அவர் எச்சரித்தார்.  

முன்னதாக, Nenggiri இடைத்தேர்தலில் பாஸ் கட்சியின் தோல்விக்குத் தேர்தல் பொறுப்பாளரான Annuar Musa பெறுபேற்க வேண்டும் என பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் Takiyuddin Hassan வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது. 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *