நெதர்லாந்தின் புதிய கோல் மன்னனாக உறுவெடுத்தார் மெம்பிஸ் டிபாய்

top-news

லிதுவேனியா, செப் 9-

செய்தி-வெற்றி மைந்தன்

நெதர்லாந்து தேசிய அணியின் முன்கள வீரர் மெம்பிஸ் டிபாய், அதிக கோல்கள் அடித்தவராக புதிய சாதனை படைத்த பின்னர் பெருமிதம் தெரிவித்தார். மேலும், அணியுடன் நீண்ட காலம் தொடர்ந்து விளையாடுவதற்கு உறுதியுடன் இருப்பதாக கூறினார்.

லிதுவேனியாவுக்கு எதிரான உலகக் கோப்பை தகுதிச் சுற்று ஆட்டத்தில், டிபாய் இரண்டு கோல்கள் அடித்து ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப் போட்டியில் நெதர்லாந்து 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று, நான்கு போட்டிகளில் 10 புள்ளிகளைப் பெற்றது.

கடந்த ஜூன் மாதம் மால்டாவுக்கு எதிராக இரண்டு கோல்கள் அடித்து, ராபின் வான் பெர்சியின் 50  கோல்கள் என்ற சாதனையை டிபாய் சமன் செய்திருந்தார். ஆனால், கடந்த வாரம் போலந்துக்கு எதிராக ரோட்டர்டாமில் நடந்த ஆட்டத்தில் 1-1 என டிரா செய்தபோது, புதிய சாதனை படைக்கும் வாய்ப்பை அவர் தவறவிட்டார்.

இருப்பினும், டிபாய் வெறும் 11 நிமிடங்களில் புதிய சாதனையைப் படைத்தார். பின்னர், லிதுவேனியா இரண்டு கோல்கள் பின்னடைவில் இருந்து 2-2 என சமன் செய்தபோது, டிபாயின் துல்லியமான தலையால் அடிக்கப்பட்ட கோல் நெதர்லாந்துக்கு வெற்றியை உறுதி செய்தது. இந்த வெற்றி, தகுதிச் சுற்று குழுவில் நெதர்லாந்தின் நிலையை வலுப்படுத்தியது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *