என் வாழ்வின் புதிய தொடக்கம்! - டான்ஸ்ரீ அஸாம் பாக்கி

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 6: மலேசிய லஞ்ச  ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் பதவியிலிருந்து தான் விரைவில் ஓய்வு பெறுவது, தன் வாழ்வில் ஒரு புதிய தொடக்கமாக அமையும் என்று அஸாம் பாக்கி கூறியுள்ளார்.

அரசு ஓய்வூதியதாரர்கள் நாட்டிற்கு தொடர்ந்து சேவை செய்யக்கூடிய ஒரு முக்கிய சொத்து என்றும், தனது தனிப்பட்ட பாரம்பரியம் தனக்கு முன்னுரிமை அல்ல என்றும் அஸாம் கூறினார்.

அரசு ஓய்வூதியதாரர்கள் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும், அவர்களின் பங்களிப்புகளுக்காக பொதுவாக நினைவுகூரப்படுகிறார்கள் என்றும், மலேசியலஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தில் உள்ள சக மூத்த அதிகாரிகள் ஓய்வை ஒரு புதிய மற்றும் அர்த்தமுள்ள வாழ்வின் தொடக்கமாகக் கருத வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் பணியாளர்கள் மற்றும் முன்னாள் அதிகாரிகளின் பங்களிப்புகளை அங்கீகரித்து பாராட்டுவதற்காக சிலாங்கூரில் உள்ள பாங்கியில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் அவர் இவ்வாறு கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *