புதரில் ஆடவர் பிணம்! போலீஸ் விசாரணை!

top-news

கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆணின் சடலம் நேற்று முன் தினம்  Km10 Jalan Seremban-Port Dickson என்ற இடத்தில் உள்ள பேருந்து நிலையம் அருகே உள்ள புதர் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.

41 வயதான உயிரிழந்தவரின் சடலம் காலை 9.20 மணியளவில் கண்டெடுக்கப்பட்டது குறித்து, பொதுமக்களிடம் இருந்து போலீஸாருக்கு தகவல் கிடைத்ததாக போர்ட் டிக்சன் மாவட்ட காவல் துறைத் தலைவர் அய்டி ஷாம் மொஹமட் தெரிவித்தார்.

போர்ட் டிக்சன் மருத்துவமனையில் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில் கழுத்து மற்றும் தலையின் ஓரத்தில் வெட்டுக் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக ஷாம் மொஹமட் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *