நைட்ரஜன் வாயுக் கசிவு... 3 தொழிலாளர்கள் பாதிப்பு!

top-news

ஷா ஆலம் கோத்தா கெமுனிங்கில் உள்ள ஒரு தொழிற்சாலையில் நைட்ரஜன் வாயுக் கசிவு ஏற்பட்டதில் மூன்று தொழிலாளர்கள் காயமடைந்தனர், அவர்களில் ஒருவர் படுகாயமடைந்தார்.
காலை 10.14 மணிக்கு இந்தச் சம்பவம் குறித்து தங்களுக்கு அழைப்பு வந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி இயக்குநர்  அஹ்மத் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.
ஷா ஆலம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில் இருந்து 12 தீயணைப்பு வீரர்கள் மற்றும் மூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் கூறினார்.
தொழிற்சாலை ஊழியர்கள் அழுத்தம் சோதனை நடத்தியபோது நைட்ரஜன் வாயுக் கசிவு ஏற்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *