ஈரான் – லெபனான் மலேசியர்களை திருப்பி அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை! - வெளியுறவுத்துறை

top-news

ஈரான், இஸ்ரேல் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், ஈரான், ஜோர்டான் மற்றும் லெபனானில் உள்ள மலேசியர்களை திருப்பி அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை என்று வெளியுறவுத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹசன் தெரிவித்துள்ளார்.
விஸ்மா புத்ரா இந்த நாடுகளின் நிலைமையைக் கண்காணிப்பதாகவும், அங்குள்ள மலேசியர்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதை உறுதி செய்வதாகவும் அவர் கூறினார்.
மக்களை வெளியேற்றுமாறு தேசிய பாதுகாப்பு மன்றம் அறிவுறுத்தினால், அவர்கள்  அழைத்துவரப்படுவார்கள்என்று இன்று வெளியுறவு அமைச்சின் ஹரி ராயா ஐடில்பித்ரி திறந்த இல்ல உபசரிப்பில் இதனைத் தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *