ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தவர்களுக்கு மாமன்னர் இரங்கல்!

top-news

லுமுட் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இந்த சோகத்தில் தேசத்தின் மாவீரர்களை இழந்ததற்காக தானும் பேரரசியாரும்  மிகுந்த வருத்தமடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்,

நம்மை விட்டு என்றென்றும் பிரிந்தவர்களுக்கு இரங்கல்கள். அவர்கள் விசுவாசிகள் மற்றும் தியாகிகள் மத்தியில் வைக்கப்படுவார்கள் என்று சுல்தான் இப்ராஹிம் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆயுதப் படை மூலம் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *