ம.இ.கா - ம.சீ.ச தங்கள் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும்! - அம்னோ

top-news

பாரிசான் நேசனல் வேட்பாளரை நிறுத்தாவிட்டால், கோலா குபு பஹாரு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடாமல் இருக்க MCA மற்றும் MIC எடுத்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அம்னோ துணைத் தலைவர்  டத்தோஸ்ரீ வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் தெரிவித்தார்.

 

அவர்களின் முடிவுக்கு மதிப்பளிக்கிறோம் அதே வேளையில், ஒற்றுமை அரசாங்கத்தின் பங்காளி என்ற முறையில், மே 11 அன்று திட்டமிடப்பட்டுள்ள இடைத்தேர்தலில் யார் வேட்பாளராக நிற்க பொருத்தமானவர் என்ற எந்த முடிவையும் அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் நினைவுறுத்தினார்.

 

 அம்னோ உட்பட பாரிசான் நேஷனலின் கூறுக் கட்சிகள் இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும், ஏனெனில் கூட்டாக ஒற்றுமை அரசாங்கத்தை அமைக்க ஒப்புக்கொண்டுள்ளோம்" என்று ஓர் அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *