செராஸ் மாவட்டத்தில் 3 லட்சம் வெள்ளி மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கியது

top-news


 பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் செராஸ் போதைப்பொருள் குற்றப்பிரிவு மேற்கொண்ட நடவடிக்கையில் 3 லட்சம் வெள்ளி மதிப்புள்ள போதைப்பொருளைர் போலீஸார் பறிமுதல் செய்துள்ளதாக  கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி  முகமட் இசாக் தெரிவித்தார்.

 இது தொடர்பாக செராஸில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் 6 ஆடவர்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டதாக  அவர் கூறினார்.  முன்னதாக மற்றொரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பெண் கைது செய்யப்பட்டதாகவும், மேலும் ஒரு வீட்டில் சோதனை மேற்கொண்டதில் 24 வயது ஆடவர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார். இந்தக் கும்பல் சுமார் 2 ஆண்டுகளாக போதைப்பொருள் விநியோகம் செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட நபர்கள் விசாரணைக்காக7நாள்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும்,  பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் கிட்டதட்ட 189.740 பேர் உபயோகிக்கூ/கூடியது என்றும் அவர் தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *