முகைதீன் மருமகனைத் தேடுவதில் MACC தீவிரம்!

top-news

முன்னாள் பிரதமர் முகைதின் யாசினின் மருமகன் அட்லான் பெர்ஹானைக் கண்டுபிடிப்பதில் மும்முரமாக இருப்பதாக மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான எம்ஏசிசி தெரிவித்துள்ளது.

அவரது கிரெடிட் கார்டுகளின் பயன்பாட்டைக் கண்காணிப்பதில் இருந்து அவர் இருக்கும் இடத்தைப் பற்றிய புதிய தடயங்களை தங்கள் தரப்பு பெற்றுள்ளதாக எம்.ஏ.சி.சி தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்தார்.

பல நாடுகளில் அவர் இருக்கிறார், அவரைக் கண்டுபிடிக்க இன்டர்போலின் உதவியைக் கோரியுள்ளோம் என்று அவர் கூறினார்.

ஆனாலும், அவரிடமிருந்தோ அல்லது அவரது வழக்கறிஞரிடமிருந்தோ எந்தத் தொடர்பும் இல்லை என்று அஸாம் பாக்கி  தெரிவித்துள்ளார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Haari Murugan

Good article