ஜொகூரில் 52 வெளிநாட்டினர் கைது - தேசியக் குடிநுழைவுத் துறை அதிரடி.

top-news
FREE WEBSITE AD

ஜொகூர் Iskandar Puteri'இல் செயல்பட்டு வந்த 2 தொழில்சாலைகளில் ஜொகூர் மாநிலக் குடிநுழைவுத் துறையினரும் தேசியக் குடிநுழைவுத் துறையினரும் நடத்திய சோதனையில் 52 வெளிநாட்டினர்கள் உட்பட 2 உள்ளூர் ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை ஜொகூர் மாநிலக் குடிநுழைவுத் துறையின் இயக்குநர் Mohd Faizal Bin Shamshudin தெரிவித்தார். 

கைது செய்யப்பட்ட அனைவரும் 20 முதல் 40 வயதினர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணைக்காக அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அனைவரும் சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் நுழைந்ததை ஒப்புக் கொண்டதாகவும் ஜொகூர் மாநிலக் குடிநுழைவுத் துறையின் இயக்குநர் Mohd Faizal Bin Shamshudin தெரிவித்தார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *