இளைஞர்களுக்காக PKR இன் கதவைத் திறந்து வையுங்கள்! - Nurul Izzah Anwar வலியுறுத்து!

top-news
FREE WEBSITE AD

குறுக்கிய காலமாக PKR கட்சியில் இளைஞர்களின் பங்களிப்புக் குறைந்து வருவதைத் தாம் உணர்வதாக PKR கட்சியின் உதவித் தலைவர் Nurul Izzah Anwar தெரிவித்துள்ளார். PKR கட்சியின் மூத்த தலைவர்கள் இளைஞர்களை அடையாளம் கண்டு அடுத்த தலைமுறையை வழிநடத்த முன்வர வேண்டும் என Nurul Izzah Anwar வலியுறுத்தினார்.

மற்ற கட்சிகளைப் போல கூட்டத்தின் தலை கணக்குகாக இளைஞர்களை ஒன்று திரட்டாமல் அரசியல் கொள்கையும் அரசியல் அறிவுடைய இளைஞர்களைத் திரட்டும் முயற்சியில் PKR கட்சி செயல்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

PKR கட்சி தொடங்கிய போது அப்போதைய இளைஞர்கள் ஒன்றிணைந்து PKR கட்சிக்காக உழைத்தனர். அவர்கள் விதைத்ததைத் தற்போது நாம் அறுவடை செய்கிறோம்.

இதனை உணர்ந்து அடுத்த தலைமுறைக்கு PKR கட்சியைக் கொண்டு சேர்க்கும் செயல் திட்டங்களை கட்சியின் தலைமை முன்னெடுக்க வேண்டும் என்றும் மாவட்டத் தலைவர்கள் செயல்படுத்த வேண்டும் என PKR கட்சியின் உதவித் தலைவர் Nurul Izzah Anwar வலியுறுத்தினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *