ஈப்போவில் பேருந்து கவிழ்ந்தது! 41 பயணிகள் காயம்!

top-news
FREE WEBSITE AD

இன்று காலை 7 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து விபத்துக்குள்ளானது. நெடுஞ்சாலையின் 264 ஆவது கிலோமீட்டரில் இப்பேருந்து விபத்து நிகழ்ந்திருப்பதாக பேராக் மாநில மீட்புப் படை உதவி ஆணையர் Sharudi bin Muhamad Halil தெரிவித்தார்.

41 பயணிகளுடன் வடக்கு நோக்கிப் பயணித்த அப்பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்புச் சுவரை மோதி விபத்துக்குள்ளானதாகவும் இவ்விபத்தில் 41 பயணிகளும் காயம் அடைந்ததாகவும் எந்தவோர் உயிர் சேதமும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

விபத்துக் குறித்தான மேல் விசாரணையைக் காவல் ஆணையம் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *