தொலைத்தொடர்பலைகளைக் கருப்பொருளாகக் கொண்ட ரவுப் தமிழ்ப்பள்ளியின் போட்டி விளையாட்டுகள்

top-news
FREE WEBSITE AD

நேற்று 12.05.2024 ரவுப் தமிழ்ப்பள்ளியில் 47 ஆம் ஆண்டுப் பள்ளி விளையாட்டு போட்டி  நேர்த்தியாக நடந்தேறியது. இவ்வாண்டின் ரவுப் தமிழ்ப்பள்ளி விளையாட்டுப் போட்டியைப் பகாங் மாநில முதலமைச்சரின் இந்தியர் நலச் சிறப்பு அதிகாரி திருமதி அனிதா குமாரி திறந்து வைத்தார்.

குழு விளையாட்டுகள், திடத்தட போட்டிகள், பெற்றோர்களுக்கான சிறப்பு போட்டிகள் என பல்வகையான போட்டிகளோடு இவ்வாண்டு விளையாட்டுப் போட்டி தாங்கி மலர்ந்தது. சிவப்பு இல்லம் ரெட்வான், நீல இல்லம் CELCOM, பச்சை இல்லம் MAXIS, மஞ்சள் இல்லம் DIGI என தொலைத்தொடர்பலைகளைக் கருப்பொருளாகக் கொண்டது சிறந்த முன்னெடுப்பாக அமைந்தது.

அன்னையர் நன்னாளை முன்னிட்டு பெற்றோர்களுக்குப் பள்ளி நிர்வாகம் சிறப்புப் பரிசையும் வழங்கி அவர்களைச் சிறப்பித்தது. மஞ்சள் நிற அணி ரவுப் தமிழ்ப்பள்ளியின் 47 ஆவது  விளையாட்டு போட்டியில் முதல் நிலையில் வெற்றி வாகை சூடியது. இரண்டாம் நிலையில் நீல இல்லம்,  மூன்றாம் நிலையில் சிவப்பு இல்லம், நான்காம் நிலையில் பச்சை இல்லம் வென்றனர்.

பள்ளி தலைமை ஆசிரியர் திரு கி.தமிழ்வாணன் அவர்கள் ரவுப் தமிழ்ப்பள்ளியின் 47வது ஆண்டு பள்ளி விளையாட்டு போட்டிக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Not Ali Eh

[email protected]