500 கிலோ எடை கொண்ட முதலை சிக்கியது!

top-news

மலாக்கா  மெர்லிமாவில் உள்ள ஜாலான் பந்தாய் சிரிங், கம்போங் பந்தாய் என்ற இடத்தில் 500 கிலோ எடையுள்ள 5 மீட்டர் நீளமுள்ள முதலை தீயணைப்பு வீரர்களால் பிடிக்கப்பட்டது.


மெர்லிமாவ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திற்கு புதன்கிழமை (ஏப்ரல் 17) மதியம் 12.06 மணிக்கு ஒரு பேரிடர் அழைப்பு வந்ததை அடுத்து,  நடவடிக்கைத் தளபதி முகமட் சுஃபியன் அபு பக்கர் தலைமையிலான ஏழு பேர் கொண்ட குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது.


சுமார் பத்து நிமிடங்களில் குழு சம்பவ இடத்திற்கு வந்தவுடன் நடவடிக்கை தொடங்கியதாக மலக்கா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.


இதனை அடுத்து அப்பகுதியில் உள்ள உள்ளூர் மீனவர்களின் உதவியுடன் ஒரு மணி நேரத்திற்குள் முதலை பிடிக்கப்பட்டதாக அவர் கூறினார்!


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *