ஆறு மாத குழந்தையை அடித்துக் கொன்ற தந்தை!

top-news

காஜாங்கில் ஆறு மாத குழந்தை ஒன்று தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மரணமடைந்த நிலையில், சந்தேகத்தின் பேரில் அவரின் தந்தை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.


சம்பந்தப்ப்ட்ட  குழந்தை சுயநினைவின்றி கிடந்த நிலையில் பின்னர்  குழந்தை இறந்துவிட்டதை மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியதாக காஜாங் மாவட்ட காவல்துறை துணைத்தலைவர் சூப்ரிடென்டன்ட் முஹம்மத் நஸிர் கூறினார். 


இந்த சம்பவம் தொடர்பாக குழந்தையின் தந்தையிடமிருந்து காலை 8.52 மணிக்கு புகார் கிடைக்கப்பெற்றதோடு, உடற்கூறு ஆய்வில் குழந்தையை யாராவது பலமாகத் தாக்கியிருக்கலாம் என்று கண்டறியப்பட்டது. இதன் அடிப்படையில் குழந்தையின் தந்தை கைது செய்யப்பட் டுள்ளார்.


25 வயது மதிக்கத்தக்க அவ்வாடவர்  ஷாபு வகை போதைப்பொருளை உட்கொண்டிருப்பது கண்டறியப்பட்டது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *