ஓம்ஸ் சமய வகுப்பு! இலவசமாக திருமுறை வகுப்புகள் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும்!

top-news

நாளைய தலைமுறையின் நல் வாழ்வுக்கு திருமுறைகளைக் கற்பிக்கும் நோக்கில், இலவச சமய வகுப்பு ஓம்ஸ் அறவாரியத் தலைவர் ஓம்ஸ் பா.தியாகராஜன் ஆதரவில், ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும், இரவு 7.00 மணி முதல், 8.30 மணி வரை எண். 5, ஜாலான் செருலிங் 58, கிளாங் ஜெயா எனும் முகவரியில் நடைபெற்று வருகிறது. 

இதற்கான அறிமுக விழா நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆசிரியை திருமதி சித்திரை மலர் மற்றும் ஓதுவார் செல்வம் திருமுறையைப் போதித்து வகுப்பினைத் தொடங்கி வைத்தனர். பக்தி மணம் கமழ, குழந்தைகளின் அழகு தமிழில், சிற்றுண்டியோடு நிகழ்வு  இனிதே நிறைவுற்றது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *