ம.இ.கா புறக்கணிக்கவில்லை! - அன்வார்

top-news

வரவிருக்கும் கோலா குபு பஹாரு இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானின் வேட்பாளரை மஇகா புறக்கணிப்பதாகக்  கூறப்படுவது தவறானது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.

அடுத்த மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் பக்காத்தானின் வேட்பாளருக்கு உதவ கட்சியின் விருப்பத்தை
மஇகா தலைவர் டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன்,
தம்மிட. தெரிவித்ததாக பிரதமர் கூறினார்.

மே 11ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் பக்காத்தான் வேட்பாளரை புறக்கணிக்க மஇகா மற்றும் மசீச ஆகிய இரு கட்சிகளும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் பேச்சு குறித்து கேட்டபோது அன்வார் இவ்வாறு கூறினார்.

அது உண்மை இல்லை என்றும் மஇகா தலைவர் தம்மை  அழைத்ததாகவும், திங்கட்கிழமை ஏப்ரல் 22 கோலா குபு பாருவுக்குச் செல்வதாக தம்மிடம் அவர் தெரிவித்ததாகவும் பிரதமர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *