முன்னாள் காதலியின் காதலரைக் கொன்ற முன்னாள் காதலன்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 18: இரண்டு வாரங்களுக்கு முன்பு தனது முன்னாள் காதலியின் காதலரைக் கொலை செய்ததாக, இன்று பத்து காஜா நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

 நீதிபதி ஹரித் மஸ்லான் முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது, ​​30 வயதான சம்பந்தப்பட்ட ஃபரிசல் ஃபஸ்லி சுல்கிஃப்லி தலையசைத்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலை வழக்குகள் உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் வருவதால், இதில் எந்தவிதமான வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

ஜூன் 10 அன்று அதிகாலை 4.30 மணிக்கும் 5.49 மணிக்கும் இடையில், பேராக் தெங்காவில் உள்ள ஜாலான் டிரான்ஸ் பேராக் சாலையோரத்தில் 29 வயதான ஃபஹ்மி அப்துல்லாவைக் கொலை செய்ததாக ஃபரிசல் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டு தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302-இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்பிரிவின்படி, மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். மரண தண்டனை விதிக்கப்படாவிட்டால், குறைந்தது 12 பிரம்படிகள் வழங்கப்படும்.

பிரேதப் பரிசோதனை அறிக்கை சமர்ப்பிக்கப்படும் வரை, வழக்கைக் குறிப்பிடுவதற்காக நீதிமன்றம் ஜூலை 20-ஆம் தேதியை நிர்ணயித்துள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *