ஷா ஆலமில், பொது மக்களை அச்சுறுத்திய முதலை பிடிபட்டது!

top-news
FREE WEBSITE AD

ஷா ஆலம், செப் 5: சிலாங்கூர் வனவிலங்கு மற்றும் தேசிய பூங்கா  துறையினர், ஷா ஆலம் செக்‌ஷன் 7 பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்திக்கொண்டிருந்த முதலையை பொறி வைத்துப் பிடித்தனர். இதனால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

நேற்று இரவு 10.20 மணியளவில் முதலை பொறிக்குள் நுழைந்ததாக, சிலாங்கூர் பெர்ஹிலித்தான் இயக்குனர் வான் முகமட் அடிப் வான் முகமட் யூசோ தெரிவித்தார்.

மேலும் இரண்டு நாட்களுக்கு அப்பகுதியை கண்காணித்து வருவதாகவும், அந்த நேரத்தில் ஏரியில் மற்ற முதலைகள் இல்லை என்பதை உறுதி செய்வதற்காக பொதுமக்கள் நடமாட்டத்திற்கு அப்பகுதி மூடப்பட்டிருக்கும் என்றும் அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *