விபத்தில் 3 இந்தியர்கள் மரணம்! 20 வயது ஓட்டுநர் கைது!

top-news
FREE WEBSITE AD

Shah alam நெடுஞ்சாலையில் சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த இந்தியத் தொழிலாளர்கள் மீது கார் மோதியதில் 3 இந்தியர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக SHAH ALAM மாவட்டக் காவல் ஆணையர் Mohd Iqbal Ibrahim தெரிவித்தார்.

நேற்று அதிகாலை 3 மணியளவில் NKVE நெடுஞ்சாலையில் இவ்விபத்து நிகழ்ந்ததாகவும் 3 இந்தியத் தொழிலாளர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் ஒரு BANGLADESH தொழிலாளர் படுகாயம் அடைந்ததாகவும் அவர் தெரிவித்தார். விபத்திற்குக் காரணமான 20 வயது கார் ஓட்டுநர் எந்தவொரு காயமுமின்றி தப்பியதாகவும் தற்போது அவர் கைது செய்யப்பட்டு விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *