பணக்காரர்களின் வாகனம் மட்டும்தான் பழுதாகிறதா? - முகைதீன் கேள்வி

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 14: டீசல் மானியத்தைப் முறைப்படுத்துவது பணக்காரர்களை மட்டுமின்றி, பிற வருமானத்தில் உள்ளவர்களையும் பாதிக்கும் என்று முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முகைதின் யாசின் தெரிவித்துள்ளார்.

பாகோ நாடாளுமன்ற உறுப்பினருமான அவர்,  டீசல் விலை சாதாரண மக்களை எவ்வாறு பாதிக்கும் என்பதற்கான சில உதாரணங்களைப் பகிர்ந்துள்ளார்.

டீசல் மானியம் பகுப்பாய்வு  செய்யப்பட்ட சில நாட்களிலேயே, வாகன இழுவை நிறுவனங்கள் தங்கள் சேவைகளின் விலையை உயர்த்தியிருக்கின்றன என்று குறிப்பிட்ட அவர்,  பெரும் பணக்காரர்களின் வாகனங்கள் மட்டும்தான் சாலையில் பழுதடைகிறதா? ஏழை என்று கருதப்படுபவர்களின் கார்கள் பழுதடைவதில்லையா? என்று கேள்வி எழுப்பினார்.

அதே போல் கான்கிரீட் உற்பத்தியாளர்களும் கான்கிரீட் விலையை உயர்த்தியுள்ளனர். இதற்குப் பிறகு கண்டிப்பாக வீடுகளின் விலை உயரும். பெரும் பணக்காரர்கள் மட்டும்தான் வீடு வாங்குகிறார்களா?  மற்றவர்கள் வாங்குவதில்லையா என? வினவினார்.

வெள்ளரிக்காய்,  மிளகாய் போன்ற காய்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதாகவும் முகைதீன் சுட்டிக்காட்டினார்.
காய்கறிகள் சாப்பிடுவது பெரும் பணக்காரர்கள் மட்டும்தானா?  என்று அவர் தனது கேள்வியை முன் வைத்தார்!



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *