SPM தேர்வு முடிவுகளை முன்கூட்டியே அறிவியுங்கள்! - NUTP கோரிக்கை

top-news
FREE WEBSITE AD

மே 27 -ஆம் தேதி வெளிவரவிருக்கும் SPM 2023 முடிவுகளின் அறிவிப்பை முன்கூட்டியே அறிவிக்க கல்வி அமைச்சிடம் தேசிய ஆசிரியர் தொழில் சங்கமான (NUTP) வேண்டுகோள் விடுத்துள்ளது.

மே 25 ஆம் தேதி தொடங்கும் பள்ளி விடுமுறைக்கு மிக அருகில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளதாக  கல்வியாளர்கள் கவலை தெரிவித்தனர்.

SPM தேர்வு  முடிவுகளுக்கான தேதியை மே 23 -ஆம் தேதிக்கு மாற்றி வைக்குமாறு அதன் பொதுச் செயலாளர் ஃபௌசி சிங்கன் முறையிட்டார்.

மே 25 முதல் வரவிருக்கும் பள்ளி விடுமுறைகளுக்கான ஆரம்பத் திட்டங்களை ஆசிரியர்கள் ஏற்கனவே செய்திருப்பதே இதற்குக் காரணம்," என்று அவர் கூறினார்.

கல்வி அமைச்சின் அறிவிப்பைத் தொடர்ந்து ஆசிரியர்களிடமிருந்து NUTPக்கு ஏராளமான புகார்கள் வந்ததாகவும் ஃபௌசி கூறினார்.

ஆண்டு முழுவதும் தங்கள் மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் அதிக நேரத்தையும் முயற்சியையும் செலவழித்து, விடுமுறைக் காலத்திற்குத் தயாராக ஆசிரியர்களுக்கு போதுமான நேரம் தேவை என்று அவர் கூறினார்.

 பல ஆசிரியர்கள் ஏற்கனவே தங்கள் சொந்த ஊர்களில் இருப்பார்கள் அல்லது தங்கள் குடும்பங்களுடன் விடுமுறை திட்டங்களை வைத்திருப்பார்கள்.

எனவே, கல்வி அமைச்சின் நிர்வாகம் ஒரு முடிவை எடுப்பதற்கு முன் நிலைமையை கவனமாக பரிசீலித்து புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர்  கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *