சூப்பர் லீக்கில் அவசரப்பட தேவையில்லை - கிம் ஸ்வீ

top-news
FREE WEBSITE AD

கோத்தா கினபாலு, மே 10-
இந்தப் பருவத்தில் சூப்பர் லீக்கின் ஆரம்ப கட்டத்தில் சபா அணி அவசரப்பட்டு தவறான உத்திகளைப் பயன்படுத்த விரும்பவில்லை என்றும்   அணியை மேம்படுத்திக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் சபா எஃப்சி தலைமைப் பயிற்சியாளர் டத்தோ ஓங் கிம் ஸ்வீ கூறினார்.
கடந்தப் பருவத்தை போல லீக்கில் முதல் மூன்று இடங்களைத் தக்க வைத்துக் கொள்வது பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நட்பு ஆட்டங்களில் அணிகளின் பலம்,  பலவீனங்களை கண்டறிந்துள்ளோம். இந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஆட்டத்தில்  அதற்கான மேம்பாடுகள் களத்தில் காட்டப்படும் என்றார்.
இதுவரையில் விளையாட்டாளர்கள் அனைவரும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.  மேலும்,  கடினமாக உழைக்கக்கூடிய, அதிக திறன் கொண்ட இளைஞர்களுக்கு வாய்ப்புகளை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.
இந்த ஞாயிற்றுக்கிழமை, சபா அணி, பினாங்கு எஃப்சிக்கு எதிராக லிக்காஸ் அரங்கத்தில் இந்தப் பருவத்தில் முதல் சூப்பர் லீக் ஆட்டத்தில் விளையாடும்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *