மற்றும் ஒரு மலாய் கட்சியா? அது அவசியமில்லை! - அம்னோ

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், பிப் 22: எதிர்க்கட்சித் தலைவர் ஹம்சா ஜைனுதீன் மற்றும் பலர் பெர்சாத்துவிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, மற்றொரு மலாய் அரசியல் கட்சியை உருவாக்க வேண்டிய அவசியமில்லை என்று அம்னோ துணைத் தலைவர் காலித் நோர்டின் தெரிவித்துள்ளார்.

பெர்சாத்துவில் வெடித்த கொந்தளிப்பு, முன்னாள் அம்னோ தலைவர்களான டாக்டர் மகாதிர் முகமது மற்றும் முகைதீன் யாசின் ஆகியோரால் 2017 இல் அதிகாரப்பூர்வமாக உருவாக்கப்பட்ட அம்னோ பிரிந்த கட்சியின் பிளவுபட்ட தன்மையைக் காட்டுகிறது என்று காலித் கூறினார்.

பெர்சாத்துவின் தலைமை எப்போதும் பதவிகளுக்காகப் போராடுவதாகத் தெரிகிறது என்றும், அவர்களின் கவனம் மக்களின் தேவைகள் மற்றும் சவால்களில் இல்லை என்றும் அவர் கூறினார். 

பெர்சாத்து எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பது எங்களுக்குத் தெரியும். இது கொஞ்ச வருடங்கள்தான் ஆகின்றன, ஆனால் கட்சி ஏற்கனவே ஆழமாகப் பிளவுபட்டுள்ளது. பெர்சாத்து போன்ற புதிய கட்சிகளில் நாம் அதிக நம்பிக்கை வைக்க முடியாது என்பதை இது காட்டுகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

‘ருமா பங்சா’ குழுவின் தலைவராக, அவர்கள் அம்னோவுக்குத் திரும்புவதை நான் வரவேற்கிறேன். மலாய்க்காரர்களை ஆதரிக்க நாம் அனைவரும் ஒரே தளத்திற்குத் திரும்ப முடியும் என்று நம்புகிறேன், ஏனென்றால் அது மலாய்க்காரர்களுக்குப் பிரிவினையை ஏற்படுத்தாது என்று அவர் தெரிவித்துள்ளார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *