எலி விஷம் சாப்பிட்ட மற்றொரு சிறுவனும் மரணம்!

top-news
FREE WEBSITE AD

கெடா, ஜூலை 12: இரண்டு சகோதரர்கள் எலி விஷம் கலந்த தின்பண்டங்களை சாப்பிட்டு, அவர்களில் ஒருவர் நேற்று உயிரிழந்த நிலையில், தற்போது ஆபத்தான நிலையில் இருந்த இன்னொரு சிறுவனும் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு வயது சகோதரர் லுத் சௌகி நூர் சுஃப்யான் இன்று உயிரிழந்தார்.

சிறுவர்களின் தாயார், நுரைன் ஹஸ்னோரிசல், இன்று வார்டுக்குச் சென்று இளைய சிறுவனின் மரணத்தை உறுதிப்படுத்தினார்.

இன்று மதியம் 1.24 மணியளவில் லூத் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கெடா, லாபு பெசாரில் உள்ள கம்போங் பாங்கோல் பெராங்கனில் உள்ள அவரது சகோதரரின் கல்லறைக்கு அருகில் அவர் அடக்கம் செய்யப்படுவார் என்று தாயார் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *