பள்ளியில் மீண்டும் ஒரு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! பாலிங்கில் சிதைக்கப்பட்ட சிறுமி

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர். அக் 16: பாலிங்கில் உள்ள ஒரு பள்ளியைச் சேர்ந்த மூன்று பேர் உட்பட நான்கு பதின்ம வயது மாணவர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் சமூக ஊடகங்களில் ஆபாச உள்ளடக்கத்தைப் பரப்பியதாக சந்தேகிக்கப்படும் வகையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை 53 வயது நபரிடமிருந்து அதிகாரிகளுக்கு புகார் கிடைத்ததாகவும், தனது குழந்தையை நிர்வாணமாக காட்டும் வீடியோ வைரலாகியதாக அவருக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும் பாலிங் காவல்துறைத் தலைவர் அகமது சலிமி மாட் அலி தெரிவித்தார்.

விசாரணைகளை எளிதாக்குவதற்காக மூன்று மாணவர்களும் ஒரு முன்னாள் மாணவரும் அதே நாள் இரவு 9.30 மணிக்கு கைது செய்யப்பட்டனர்.

மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் சம்பந்தப்பட்ட பள்ளியின் வகுப்பறைகளில் பல இடங்களில் நான்கு சந்தேக நபர்களும் குழுவாக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதை கண்டறிந்துள்ளதாக சலிமி கூறினார்.

அவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து ஐந்து நாட்களுக்கு காவலில் வைக்கப்பட்டனர். போலீசார் ஆறு கைபேசிகளையும் பறிமுதல் செய்தனர்.

கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் குழந்தை ஆபாசப் படங்களை விநியோகித்ததற்காக இந்த விஷயம் விசாரிக்கப்படுவதாக சலிமி கூறினார்.

மலாக்காவில் 15 வயது சிறுமி நான்காம் படிவம் 5 மாணவர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் வாரங்களுக்குப் பிறகு பாலிங்கில் நிகழ்ந்த இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்த்தியுள்ளது.

கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி, தான் விட்டுச் சென்ற ஒன்றை மீட்டெடுக்க தனது வகுப்பறைக்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​பாதிக்கப்பட்ட பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.

சந்தேக நபர்களில் இருவர் இந்த சம்பவத்தைப் பார்த்து தங்கள் மொபைல் போன்களில் பதிவு செய்ததாகவும், பின்னர் அந்த வீடியோக்கள் ஆன்லைனில் பரப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *