செராஸ் "டோப்ஸ் அரேனா" உள்ளரங்கில் நடைபெற்ற அனைத்துலக பூப்பந்துப் போட்டி!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப். 12-

அனைத்துலக அளவில் பூப்பந்துப் போட்டி  கடந்த 23.8.2024 முதல் 25.8.2024 தேதி வரை தலைநகர் செராஸ் “டோப்ஸ் அரேனா " உள்ளரங்கில் நடைபெற்றது. இந்த பூப்பந்து போட்டியில் 60 வயதினருக்கான பிரிவில் லெஜன்ட் பாலா, டத்தோ அலெக்ஸ் ஓங் இணையர் முதல் நிலை வெற்றியாளராக வாகை சூடினர்.

65 முதல் 69 வயதோருக்கான போட்டியில் துரைராஜா முனியன்,செக்கு சுவா இணையர் இரண்டாம் நிலையிலும் 70 வயதுப் பிரிவில் துரைராஜா முனியன்,டேவிட் லீ இணையர் மூன்றாம் நிலையிலும் வெற்றி பெற்றனர்.

சீனர்களே அதிக அளவில் பங்கேற்ற இப்போட்டியில் இந்தியர் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணும் அளவே இருந்தது மிகவும் வருந்தத்தக்கது. 54 பிரிவுகளில் மொத்தம் 452 பேர் பங்குபெற்று தம் திறமைகளை வெளிப்படுத்தினர். 8 வயது சிறார்கள் முதல் 85 வயது முதியோர் வரை இதில் கலந்து கொண்டு எந்த வயதிலும் சாதனைபடைக்கலாம் என்பதை நிரூபிக்கலாம். விளையாட்டை வெறும் விளையாட்டாக எடுத்துக் கொள்ளாமல் அது உயிர் காக்கும் கவசம் என்பதை உணர்ந்தால் நோயற்ற வாழ்வு நிலைபெறும்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *