இணைய பகடிவதை - அன்வார் கவலை!

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, ஜூலை 12: சமூக ஊடக தளங்களில் இணைய அச்சுறுத்தல் குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கவலை தெரிவித்துள்ளார்.

இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டதாக தகவல் தொடர்பு அமைச்சர் Fahmi Fadzil தெரிவித்தார்.

இதன்படி, இணைய பகடிவதையைத் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் மற்றும் காவல்துறைக்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார் என்று இன்று தனது செய்தியாளர் சந்திப்பின் போது ஃப்ஃஃமி இதனைத் தெரிவித்தார்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *