அன்வார் - டிரம்ப் நாளை இருதரப்பு சந்திப்பு!
- Shan Siva
- 25 Oct, 2025
கோலாலம்பூர், அக் 25: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 13வது ஆசியான்-அமெரிக்க உச்சி மாநாடு மற்றும் 20வது கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டுடன் இணைந்து
அக்டோபர் 26 முதல் 27 வரை மலேசியாவிற்கு அதிகாரப்பூர்வ விஜயம்
மேற்கொள்வார் என்று விஸ்மா புத்ரா இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஆசியான் 2025 இன் தலைவராக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்
இப்ராஹிமின் அழைப்பின் பேரில் அமெரிக்க அதிபர் விஜயம் செய்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரியில் அமெரிக்காவின் 47வது அதிபராகப் பதவியேற்ற பிறகு தென்கிழக்கு
ஆசிய பிராந்தியத்திற்கு டிரம்ப் மேற்கொள்ளும் முதல் விஜயம் இதுவாகும் என்று
அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த விஜயத்தின்
போது, அன்வரும் டிரம்பும்
அக்டோபர் 26 அன்று இருதரப்பு
சந்திப்பை நடத்த உள்ளனர்.
மலேசியா-அமெரிக்க
விரிவான கூட்டாண்மைக்கு ஏற்ப, வர்த்தகம்
மற்றும் முதலீடு, பாதுகாப்பு ஆகிய
துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்து இரு தலைவர்களும்
விவாதிப்பார்கள் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பரஸ்பர அக்கறை
கொண்ட பிராந்திய மற்றும் சர்வதேச முன்னேற்றங்கள் மற்றும் வர்த்தகம் மற்றும்
பாதுகாப்பு குறித்த ஆவணங்களில் கையெழுத்திடுவது குறித்து இரு தலைவர்களும்
கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வார்கள் என்றும் விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளது.
இந்த விஜயம்
மலேசியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. இது இன்னும் கூடுதலான இருதரப்பு உறவுகளை நோக்கி
ஒரு புதிய அத்தியாயத்திற்கு வழி வகுக்கும் என்று தெரிவித்துள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



