அன்வார் - முகைதீன் சமரசம்! அவதூறு வழக்குகளை தீர்த்துக்கொள்ள ஒப்புக்கொண்டனர்!

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 14: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மற்றும் பெரிகாத்தான் நேஷனல் தலைவர் முகைதின் யாசின் இருவரும் ஒருவருக்கொருவர் அவதூறு வழக்குகளை தீர்த்துக் கொள்ள ஒப்புக்கொண்டனர்.

உயர்நீதிமன்ற நீதிபதியின் ஆலோசனை மற்றும் வழக்குகளால் பொதுமக்களுக்கு ஏற்படும் தாக்கத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக முகைதீன் கூறியுள்ளார்.

முன்னதாக, அவர்களின் இரு முகநூல் பக்கங்களிலும் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், "நாட்டின் தற்போதைய நிலை, குறிப்பாக மக்களின் நலன் தொடர்பான விஷயங்கள்" காரணமாக வழக்குகளைத் தீர்ப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டறிக்கையில், அன்வாரும் முகைதீனும் தங்கள் முடிவு அனைத்து தரப்பினராலும் மதிக்கப்படும் என்று நம்புகிறார்கள் என்று தெரிவித்துள்ளனர். மேலும் வழக்குகள் குறித்து மேலும் அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என்றும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

 வழக்குகளில் ஈடுபட்ட உயர்நீதிமன்ற நீதிபதி மற்றும் நீதிமன்ற அதிகாரிகளுக்கு தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்த மூத்த அரசியல்வாதிகள், இந்த விவகாரம் நீதித்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை பாதிக்காது என்று தெரிவித்தனர்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *