ஹமாஸ் தலைவருக்கு அன்வார் அஞ்சலி!

top-news
FREE WEBSITE AD


கோலாலம்பூர், ஆகஸ்ட் 2: மஸ்ஜித் நெகாராவில் நடைபெற்ற இஸ்ரேல் படையினரால்  படுகொலை செய்யப்பட்ட ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் இறுதிச் சடங்கில், 2,000க்கும் மேற்பட்டவர்களுடன் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கலந்து கொண்டார்.

மதியம் 12.50 மணியளவில் மசூதிக்கு வந்த பிரதமர், வெள்ளிக்கிழமை தொழுகையில் கலந்துகொள்வதற்கு முன்பு அவரை சபையினர் வரவேற்றனர்.

பிரதமர் துறை அமைச்சர் (மத விவகாரங்கள்) டத்தோ முகமட் நயிம் மொக்தார், பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது காலித் நோர்டின் மற்றும்  சபாநாயகர் டான்ஸ்ரீ ஜோஹாரி அப்துல் ஆகியோர் உடனிருந்தனர்.

மஸ்ஜித் நெகாரா தலைமை இமாம் எஹ்சான் முகமது ஹோஸ்னி தலைமையில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன, அவர் வெள்ளிக்கிழமை பிரசங்கத்தையும் வழங்கினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *