அம்னோவுக்கு அன்வார் வாழ்த்து! எதிர்காலத்தை உருவாக்க ஒத்துழைப்பு அவசியம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜன 14: 2025 அம்னோ பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் அனைத்து தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இந்தப் பொதுக்கூட்டம் ஒழுங்காக நடைபெற வேண்டும் என்றும், மக்கள் நலனைக் கவனத்தில் கொள்ளும் அர்த்தமுள்ள விவாதங்கள் இடம்பெற வேண்டும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மலேசியா MADANI கொள்கைக்கு இணங்க, தேசிய ஒற்றுமையை வலுப்படுத்த இந்த கூட்டம் பங்களிக்க வேண்டும் என அன்வார் கூறினார்.

ஒருமித்த முடிவு, பரஸ்பர மரியாதை மற்றும் இணைந்து செயல்படும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் வளர்ந்த அரசியல் மலேசியாவிற்கு அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

நிலைத்தன்மை, செழிப்பு மற்றும் மேலும் நியாயமான, அனைவரையும் உள்ளடக்கிய எதிர்காலத்தை உருவாக்க இந்த ஒத்துழைப்பு மிகவும் முக்கியம் என்றார்.

அரசியல் மற்றும் பொருளாதார சவால்கள் அதிகரித்து வரும் இக்காலத்தில், உண்மையான பலம் என்பது வேறுபாடுகளைத் தொடர்ந்து வலியுறுத்துவதில் இல்லை; மாறாக, ஒற்றுமையை வலுப்படுத்துவதில்தான் உள்ளது என்று அவர் தனது முகநூல் பதிவில் கூறினார்.

மேலும், அறிவைப் போற்றுவதும், மக்கள் மற்றும் நாட்டின் நலன்களை முன்னிலைப்படுத்தும் கூட்டு பொறுப்புணர்வை பகிர்ந்து கொள்வதும் இதன் ஒரு பகுதியாகும் என அவர் தெரிவித்தார்.

அன்வார், 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற அம்னோ பொதுக்கூட்டத்தில்   பங்கேற்றிருந்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

2025 அம்னோ பொதுக்கூட்டம் இன்று தொடங்கி   17 ஆம் தேதி வரை, உலக வர்த்தக மையம், கோலாலம்பூர் (WTCKL) இல் நடைபெறுகிறது.

சபா மாநிலத் தேர்தலுக்கு கட்சி கவனம் செலுத்த வேண்டியிருந்ததால், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தப் பொதுக்கூட்டம் இருமுறை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த பொதுக்கூட்டத்தில், முதன்மைப் பிரிவு மற்றும் இணை அமைப்புகளைச் சேர்ந்த நாடு முழுவதும் இருந்து 6,412 பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *