ஈரானின் புதிய அதிபருக்கு அன்வார் வாழ்த்து!

top-news
FREE WEBSITE AD


கோலாலம்பூர், ஜூலை 18: இரு நாடுகளின் பரஸ்பர நலன் மற்றும் செழிப்பு ஆகியவற்றில் மட்டுமே கவனம் செலுத்தும் வகையில், மலேசியா-ஈரான் ஒத்துழைப்பு வெளிநாட்டு தலையீடு இல்லாமல் இருக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் வலியுறுத்தியுள்ளார்.

ஈரானிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் மசூத் பெசெஷ்கியானுடன்  நடந்த தொலைபேசி உரையாடலின் போது இந்த செய்தியை தெரிவித்ததாக அன்வார் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

மலேசியாவுக்கும் ஈரானுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள், முதலீடுகள் மற்றும் வர்த்தகத்தை வலுப்படுத்த இரு நாடுகளின் தற்போதைய அர்ப்பணிப்பு மற்றும் பல்வேறு நம்பிக்கைக்குரிய பகுதிகளில் மேலும் ஒத்துழைப்பை ஆராய்வது குறித்தும் தங்கள் கலந்துரையாடல் இருந்ததாக  அவர் கூறினார்.

ஜூலை 30 ஆம் தேதி ஈரானின் புதிய அதிபராக பதவியேற்க உள்ள பெஜேஷ்கியானுக்கு அன்வார் வாழ்த்துகளை தெரிவித்தார்,

பாலஸ்தீன மக்களின் நீதிக்காக ஈரானின் அசைக்க முடியாத ஆதரவையும், இஸ்ரேலில் சியோனிச ஆட்சி செய்த அநீதிகள் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான அதன் எதிர்ப்பையும் தாம் பாராட்டியதாக அன்வார் கூறினார்.

ஈரானின் ஒன்பதாவது அதிபராக, ஜூலை 5ல் நடந்த அதிபர் தேர்தலில், முன்னாள் சுகாதார அமைச்சரான, 69 வயதான Pezeshkian தேர்ந்தெடுக்கப்பட்டார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *