உலக சாம்பியன் பட்டம் வென்ற செபாக் தக்ரா அணிக்கு அன்வார் வாழ்த்து!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 20: செபாக் தக்ரா உலகக் கிண்ண  போட்டியில் மலேசியா சாம்பியன் பட்டம் வென்றதை அடுத்து, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தேசிய செபாக் தக்ரா அணிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

நேற்று தித்திவங்சா மைதானத்தில் நடைபெற்ற  இறுதிப் போட்டியில், மலேசியா இந்தியாவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கிண்ணத்தைக் கைப்பற்றியது.

சமூக ஊடகப் பதிவு ஒன்றில், இந்த வெற்றி உலக அரங்கில் மலேசியாவின் மதிப்பை உயர்த்திய ஒரு பெருமைக்குரிய சாதனை என்று அன்வார் கூறினார்.

இந்த வெற்றி உலக அரங்கில் மலேசியாவிற்கு ஒரு பெருமைக்குரிய தருணம் மட்டுமல்ல, மலேசியர்கள் மீள்திறன், நோக்கத்தின் ஒற்றுமை மற்றும் சர்வதேச அளவில் தொடர்ந்து போட்டியிட்டு வெற்றிபெறும் திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ளனர் என்பதையும் இது நிரூபிக்கிறது என்று அவர் கூறினார்.

உற்சாகம், ஒழுக்கம் மற்றும் உயர்வான போராட்ட குணம் ஆகியவற்றின் மூலமே அணியின் வெற்றி கிடைத்தது என்று அன்வார் தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *