வெளிநாட்டுத் தலைவர்களை சந்திக்க விடவில்லையா? மகாதீரின் கருத்துக்கு அன்வார் மறுப்பு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், பிப் ,21: முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீரை  பல வெளிநாட்டு தலைவர்கள் சந்திக்க விடாமல் அரசாங்கம் தடுத்ததாக, மகாதீர் கூறியதை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நிராகரித்துள்ளார்.

எந்த வெளிநாட்டுத் தலைவர் அவரைச் சந்திக்க விரும்புகிறார்? அவர்கள் அவரைச் சந்திக்க விரும்பினால், என்ன பிரச்சினை? அவரது பழைய நண்பர்கள் அவரைச் சந்திக்க விரும்பினால், எந்த பிரச்சனையும் இல்லை என்று அன்வார் குறிபிட்டுள்ளார்.

சமீபத்தில், தாய்லாந்து, ஜப்பான், இந்தோனேசியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் தலைவர்கள் மலேசியாவிற்கு வருகை தந்தனர். ஆனால் யாரும் அவரைச் சந்திக்கக் கோரவில்லை. அவர்கள் கோரிக்கை வைத்திருந்தால், தாம் இல்லை என்று சொல்லப் போவதில்லை என்று அன்வார் கூறினார். 

அவர்கள் அவரைச் சந்திக்க சுதந்திரமாக உள்ளனர், அதில் எந்தத் தவறும் இல்லை" என்று பிரதமர் கூறினார்.

எனவே, டாக்டர் மகாதீரின் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று அன்வார் வலியுறுத்தினார்.

 அவர் தினமும் குற்றம் சாட்டுகிறார், பொய் சொல்கிறார். தன்னிடம் பணம் இல்லை என்று அவர் கூறுகிறார். ஆனால், இன்னும் அவரது மகன்கள் RM1 பில்லியனுக்கும் மேல் வைத்திருக்கிறார்கள். 
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ  அசாம் பாக்கி, டாக்டர் மகாதீரின் இரண்டு பிள்ளைகள் RM1.2 பில்லியனுக்கும் அதிகமான சொத்துக்களை வைத்திருப்பது கண்டறியப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *