இந்தியாவின் மூன்று முக்கிய நிறுவனங்களுடன் அன்வார் தனித்தனியே சந்திப்பு!

top-news
FREE WEBSITE AD

புதுடெல்லி, ஆகஸ்ட் 21: மலேசியாவில் முதலீடு செய்ய ஆர்வமுள்ள மூன்று இந்திய நிறுவனங்களுடன் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று புது டெல்லியில் தனித்தனியாக இருதரப்பு சந்திப்புகளை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து சுமார் 40 தொழில் அதிபர்களுடன் வட்டமேசை விவாதம் நடைபெற்றது.
இமாமி அக்ரோடெக் லிமிடெட், எச்சிஎல் டெக் மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) உடனான சந்திப்புகளில் மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம், இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் மற்றும் முதலீடு, வர்த்தகம் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஜஃப்ருல் தெங்கு அப்துல் அஜீஸ் ஆகியோரும் பிரதமருடன் கலந்து கொண்டனர். .
முன்னதாக, அன்வார் இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை ஒரு திட்டமிடப்படாத சந்திப்பில் சந்தித்தார், அது உத்தியோகப்பூர்வ நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக இல்லை.
வட்டமேஜை விவாதத்தைத் தொடர்ந்து, இந்தியாவின் ஆளும் கட்சியான பிஜேபியின் தலைவர் ஜேபி நட்டாவைச் சந்தித்த பிரதமர், பின்னர் இந்தியா டுடேக்கு பிரத்யேகப் பேட்டி அளித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *