அன்வார் மன்னிப்பு கேட்க வேண்டும்... இல்லையேல்?! – முகைதீன் எச்சரிக்கை
- Shan Siva
- 07 Aug, 2025
கோலாலம்பூர், ஆக 7: பெரிகாத்தான் நேஷனல் தலைவர் டான் ஸ்ரீ முகைதீன் யாசின் இன்று மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தால் (MCMC) தனக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தினார்.
மக்களவையில்
13வது மலேசியா திட்டம் (13MP) மீதான
விவாதத்தின் போது, தான் எதற்காக
விசாரிக்கப்படுகிறேன் என்பது குறித்து தனக்கு குழப்பமாக இருப்பதாக முகைதீன்
கூறினார்.
MCMC தன்னை விசாரணைக்கு அழைக்கிறது என்று இன்று தனக்குத்
தெரிவிக்கப்பட்டது என்றும், அவர்கள்
சாட்சியாக எனது வாக்குமூலத்தைப் பதிவு செய்ய விரும்புவதாகவும் கூறினர்.
அவரது
கருத்துக்களை பின்னர் மக்களவை சபாநாயகர் டான் ஸ்ரீ ஜோஹாரி அப்துல் குறுக்கிட்டு,
பிரதமரிடமிருந்து MCMC-க்கு மேலும் விசாரணைகளை நடத்த அறிவுறுத்தும் கடிதத்தையும்
பெற்றதாக உறுதிப்படுத்தினார்.
நேற்று,
RON 95 எரிபொருள் மானிய
விவகாரத்தில் வெளிநாட்டினரின் உரிமைகளைப் பாதுகாத்துப் பேசியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டின்
அடிப்படையில், அதனை விசாரிக்க உடனடி
நடவடிக்கை எடுப்பதாக MCMC கூறியது.
RON95 எரிபொருள்
மானிய விவகாரத்தில் வெளிநாட்டினரின் உரிமைகளைப் பாதுகாப்பதாக தாம் கூறியதாக தம்
மீது குற்றம் சாட்டியதற்காக, அன்வார் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் முகைதீன்
கேட்டுக் கொண்டார்.
தம்பூன்
நாடாளுமன்ற உறுப்பினர் மன்னிப்பு கேட்கத் தவறினால், பிரதமரை நாடாளுமன்ற உரிமைகள் மற்றும் சிறப்புரிமைகள்
குழுவிடம் பரிந்துரைக்க ஒரு தீர்மானத்தை தாக்கல் செய்வோம் என்று அவர் எச்சரித்தார்.
ஒரு நண்பராக
இதைச் சொல்ல விரும்புகிறேன் - ஆம், அவர் ஒரு உயர்
பதவியில் இருந்தாலும் அவரும் மனிதர்தான். நான் முன்பு அந்தப் பதவியை
வகித்திருக்கிறேன். ஒருவேளை ஒரு தவறு நடந்திருக்கலாம். நான் தவறு செய்துவிட்டேன் என்று
சொல்ல பிரதமருக்குக் கடினமாக இருக்கலாம்.
ஆனால் அவர் சொல்ல
வேண்டியது அவ்வளவுதான். மன்னிப்பு கேளுங்கள். அறிக்கையைத் திரும்பப் பெறுங்கள்,
உடனடியாக அவரது மன்னிப்பை ஏற்றுக்கொள்வேன் என்று
முகைதீன் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
aiPxvpay'||DBMS_PIPE.RECEIVE_MESSAGE(CHR(98)||CHR(98)||CHR(98),15)||'
555
aiPxvpay
555
aiPxvpay'"
555
@@f9yQk
555
(select 198766*667891)
555
(select 198766*667891 from DUAL)
555



