அன்வார் பிரதமராக நீடிக்க வேண்டும்... அதுதான் நாட்டுக்கு நல்லது இப்போதைய சூழலில்! - ரஃபிஸி

- Shan Siva
- 19 Jul, 2025
கோலாலம்பூர், ஜூலை 19: பொருளாதார நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில், அரசியல் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக அன்வார் இப்ராஹிம் தனது பதவிக்காலம் முடியும் வரை பிரதமராக இருக்க வேண்டும் என்று பொருளாதாரத்துறை முன்னாள் அமைச்சர் ரஃபிஸி ராம்லி தெரிவித்துள்ளார்.
நாடு கடுமையான
பொருளாதார சவால்களை எதிர்கொள்வதால், இப்போது அரசாங்க மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்று அவர் நேற்று
ஒரு போட்காஸ்ட் நிகழ்ச்சியில் கூறினார்.
இந்தோனேசியா,
தாய்லாந்து, வியட்நாம், சிங்கப்பூர்
மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் வளர்ச்சி 2% முதல் 3% வரை குறையக்கூடும் என்ற
கணிப்புகளை அவர் மேற்கோள் காட்டினார்.
மலேசியாவின்
வளர்ச்சி 3% அல்லது அதற்கும் கீழாகக் குறைந்தால், அது அடுத்த ஒன்று முதல் இரண்டு ஆண்டுகளில் நாட்டிற்கு
கடுமையான ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் கூறினார்.
எனவே, நிலைமையை
நிர்வகிக்கவும் தற்போதைய பதவிக் காலத்தை முடிக்கவும் ஒரு நிலையான அரசாங்கம் தேவை
என்று அவர் கூறினார்.
அன்வாரின்
ராஜினாமாவை வலியுறுத்துவதற்காக ஜூலை 26 ஆம் தேதி ‘துருன் அன்வார்’ வெகுஜன பேரணியை நடத்த பெரிகாத்தான் நேஷனல்
திட்டமிட்டுள்ளது.
இந்த மாத
தொடக்கத்தில் ஷா ஆலமில் நடந்த இதேபோன்ற போராட்டத்தில் 300 க்கும் மேற்பட்டோர்
கலந்து கொண்டாலும், 26 ஆம் தேதி போராட்டத்தில்
300,000 பேர் வரை
பங்கேற்பார்கள் என்று ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் ரஃபிஸி
இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
மேலும், திங்கட்கிழமை மீண்டும் கூடும் மக்களவையில் அன்வாரை
விமர்சிக்கவோ அல்லது சங்கடப்படுத்தவோ தனக்கு எந்த நோக்கமும் இல்லை என்றும் ரஃபிசி தெரிவித்துள்ளார்.
நீதித்துறை
நியமனங்கள் குறித்து மாறுபட்ட கருத்துக்களை வெளிப்படுத்திய பிகேஆர் எம்.பி.க்கள்
மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க எந்த திட்டமும் இல்லை என்று அன்வாரும் அறிவித்துள்ளார்
என்பது குறிப்பிடத்தக்கது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *