மலாக்கா நீரிணை தொடர்பாக தன்னிச்சையான முடிவெடுக்க முடியாது! - வெளியுறவு அமைச்சர்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப் 23: மலாக்கா  நீரிணை தொடர்பாக எந்தவொரு தன்னிச்சையான முடிவுகளும் எடுக்கப்பட முடியாது என்று வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ  முகமது ஹசான் தெரிவித்தார். 

இந்த முக்கிய நீர்வழியில் கடல்சார் பாதுகாப்பைப் பேணுவதில் ஆசியான் அமைப்பின் ஒருமித்த கருத்து முக்கியம் என்று வலியுறுத்தினார்.

அமெரிக்க-ஈரான் மோதலின் தாக்கம் குறித்த 10வது பெட்டர் நேஷன் கருத்தரங்கில் கூடுதல் சிறப்பு விருந்தினராகப் பேசிய அவர், உலகின் மிகவும் பரபரப்பான கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றான இந்த ஜலசந்தி வழியாகப் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்காக, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் ஒரு  உறுதியான புரிதலைப் பகிர்ந்து கொள்வதாகவும், கூட்டு ரோந்துப் பணிகளை மேற்கொள்வதாகவும் கூறினார்.

மலாக்கா ஜலசந்தியில் என்ன செய்யப்பட வேண்டுமோ, அது இந்த நான்கு நாடுகளின் ஒத்துழைப்பையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அதுதான் நமது புரிதல் – அதை ஒருதலைப்பட்சமாகச் செய்ய முடியாது என்று கூறினார்.

ஆசியான் அமைப்பு முழுவதுமாக ஒருமித்த கருத்தின் அடிப்படையில் இயங்குகிறது என்று அவர் தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *